அன்று
காமத்தை பகிர்ந்து கொள்ள
யாதொரு
முன்யோசனையுமில்லை..
தாழ் திறந்து
உள் நுழைந்து
பேசிக் கொண்டிருக்கையில்
உரசிக் கொண்டது அது..
எப்போதும் போல்தான்
என்றாலும்
எப்போதும்
போலில்லை அது..
மொழிபெயர்க்கப்பட்டுக்
கொண்டிருக்கிற
ஒரு கவிதையின்
பரிமாணத்தைப் போலானது
அந்த இரவு..
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment